சேனபுர மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையத்தில் புனர்வாழ்வு பெறுவோரின் பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்ட சிகையலங்கார நிலையத்தினை (Barber shop), புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் M.S. அமித் அவர்களின் தலைமையில் 26.01.2026 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தன்னார்வ அடிப்படையில் புனர்வாழ்வு பெற்று வரும் நபர்களுடன் அவர் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வில் புனர்வாழ்வு அத்தியட்சகர் (பதில்) லெப்டினன் கர்னல் H. M. U. D. ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.