பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு
புனர்வாழ்வு பணியகத்தின் புதிய பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம், பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம அவர்களின் தலைமையில் 2026.04.30 அன்று திறந்து வைக்கப்பட்டது. பதுளை, வினிதகம வீதி, 2ஆம் கட்டையில் (2nd Mile Post) அமைந்துள்ள பதுளை பிரதேச சபைக் கட்டிடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பதுளை பிரதேச செயலாளர் துஷாரி அனுராதா நாணயக்கார, பதுளை பிரதேச சபைத் தலைவர் பாலித்த அதுலசிறி ஜயவர்தன, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், புனர்வாழ்வு உத்தியோகத்தர் லெப்டினன் கர்னல் எஸ்.எம். கொடிதுவக்கு மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.